கேரள வெள்ள நிவாரண நிதிக்காகச் சென்னைப் பல்கலைக்கழக அங்கிகாரத்துடன் இயங்கும் எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நிதி சேகரிக்கப்பட்டது. இந்நிதியானது எங்கள் கல்லூரியின் மாணவர்கள் சார்பாகச் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழக நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாஸ்கரன் அவர்களிடம் வழங்கும்போது இந்த நிதியானது நமது பல்கலைக்கழக கல்லூரிகளில் முதன்மைப்பெற்ற தொகையாகப் பெருமிதம் கொண்டு பாராட்டினார். இந்நிதியின் மொத்த தொகை 23198 ரூபாய் ஆகும்.